சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்க நியமனம்

ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அனுமதிய வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். சபாநாயகரின் தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று வியாழக்கிழமை (11) கூடிய நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அரசியலமைப்பு பேரவையின்... Read more »

ஹிட்லர்களுக்கும் முசோலினிகளுக்கும் இலங்கையில் இடமில்லை: சஜித்

மக்களுக்கு தேர்தலை பெற்றுக்கொடுத்து அதில் வழங்கும் ஆணைக்கு இடமளியுங்கள். ஜனநாயகத்துக்கு மாத்திரமே இலங்கையில் இடமுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுவரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு... Read more »
Ad Widget

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் விடுத்துள்ள சவால்

சேவையை விட்டு விலகியதாக கருதப்படும் அறிவிப்பின்படி, தங்கள் சேவை இல்லாமல் ரயில் சேவையை நடத்த முடியுமா? என்பதைக் காட்டுமாறு ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் சவால் விடுத்துள்ளது. எங்களுக்கு பயமில்லை. வீட்டில் இருக்கவும் நாங்கள் தயார். இந்த அடக்குமுறைக்கு எதிராக நாளை மேலும் பல... Read more »

நுவரெலியாவில் அதிகாலையில் நடந்த கோர விபத்து: 25 பேர் படுகாயம்

நுவரெலியா, டொப்பாஸ் லபுக்கலை பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 25 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். நுவரெலியாவில் இருந்து திருகோணமலை நோக்கிய பயணித்த பேருந்து ஒன்றே இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த 25க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில்... Read more »

3 கோடி ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப்பத்திரம்: நாடாளுமன்ற உறுப்பினர்களை சாடும் தயாசிறி

சப்ரகமுவ மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவர் 3 கோடி ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர... Read more »

வடமாகாண சிறுவர் இல்லங்கள் தொடர்பில் ஆளுநர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

வட மாகாணத்துக்குள் இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களும் உரிய ஒழுங்கு விதிகள் மற்றும் சட்டவரையறைகளைப் பின்பற்றி இயங்குவதை உறுதிப்படுத்துமாறு வடக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் சிறுவர் மற்றும் மகளிர் இல்லங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலும், பிரதேச செயலாளரின் விசாரணைக்... Read more »

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க ரணில் மீண்டும் சதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைகக்க பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்திவந்தன. என்றாலும், உரிய காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் அறிவித்து வந்தனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் தேர்தல் உரிய காலத்தில்... Read more »

வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயாராகும் தொழிற்சங்கங்கள்

சுகயீன விடுமுறையில் இன்று (08) மற்றும் நாளை (09) பணிக்கு சமூகமளிப்பதில்லை என 200க்கும் மேற்பட்ட அரச சேவை சங்கங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி இன்று மற்றும் நாளை கிராமப்புற தொழிலாளர்கள் மற்றும் நில அளவையாளர்களின் தொழிற்சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன. இதேவேளை,... Read more »

ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஆபிரிக்க காட்டுப்பூனை

உரிய அனுமதியின்றி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக கருதப்படும் ஆபிரிக்க காட்டுப் பூனையொன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு முனையத்தின் சுங்க அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் காட்டுப் பூனை இலங்கையில் காணப்படும் சிறுத்தையை ஒத்ததாக கருதப்படுகிறது. குறித்த விலங்குகள் ஐரோப்பா மற்றும் மத்திய... Read more »

”யார் நீதிமன்றம் சென்றாலும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும்”: ரணில்

எந்தவொரு நபர் நீதிமன்றத்திற்கு சென்றாலும் இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மறைந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக்கிரியை இன்று (07) பிற்பகல் திருகோணமலையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே ஜனாதிபதி... Read more »