இதுவரையில் 38088 டெங்கு நோயாளர்கள் பதிவு

இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நேற்று (16) வரையிலான காலப்பகுதியில் 38088 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த நோயாளர்களுள் 24.8 வீதம் அதாவது 9451 நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. கம்பஹா மாவட்டத்தில் 4381 நோயாளர்கள்,... Read more »

இறுதி தேர்தல் பரப்புரை இன்று: வேட்பாளர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களில் 25 வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஒன்பது வேட்பாளர்கள் பாதுகாப்பு கோரவில்லை எனவும், நான்கு வேட்பாளர்கள் பாதுகாப்பு வேண்டுமா, வேண்டாமா என்று அறிவிக்கவில்லை எனவும் அவர்... Read more »
Ad Widget

இறுதிகட்ட பரப்புரையில் ஜனாதிபதி வேட்பாளர்கள்

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைவதால் பிரதான வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதான வேட்பாளர்கள் தமது இறுதி பிரச்சாரக் கூட்டங்களை கொழும்பை... Read more »

ஜேர்மனியில் ஒரு கல்லறைக்குள் நன்கு பாதுகாக்கப்பட்ட 3000 ஆண்டுகள் பழமையான வாள்.

ஜேர்மனியின் பவேரியாவில் உள்ள நோர்ட்லிங்கன் நகரில் உள்ள ஒரு கல்லறைக்குள் நன்கு பாதுகாக்கப்பட்ட 3000 ஆண்டுகள் பழமையான வாள் கண்டுபிடிக்கப்பட்டது. 3000 ஆண்டுகள் பழமையான இந்த வாள் மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும், சில கீறல்கள் தவிர, இந்த இடத்தில் கிடைப்பது மிகவும் அரிது... Read more »

அநுர ஜனாதிபதியானால் பிரதமராக பெண்: விஜித ஹேரத்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதமர் ஒரு பெண்ணாக இருக்கலாம் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். செப்டெம்பர் 21ஆம் திகதி வெற்றி பெற்றதன் பின்னர் அரசியலமைப்பின் 47.3 சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுடன் புதிய அமைச்சரவையொன்று நியமிக்கப்பட்டு, நாடாளுமன்றம்... Read more »

போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களுக்கு புனர்வாழ்வு மையம் ஆரம்பம்

போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களை புனர்வாழ்வளிக்க விசேட நிலையமொன்றை நிறுவுவதற்கு புனர்வாழ்வு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. வவுனியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த நிலையத்தில் 100 பெண்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட முடியும் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, நீதிமன்ற உத்தரவுப்படி போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களுக்கு இந்த மையம் மூலம் மறுவாழ்வு... Read more »

ஊழலை உண்மையாக கையாள்வதற்கு தலைவர்கள் தயாராக இல்லை !

இலங்கை அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கோரினார் என ஜப்பான் குற்றம் சாட்டியதாக ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் இருந்தபோது, ஜப்பானிடம் குறித்த அமைச்சர் இலஞ்சம் கோரியதாக விஜயதாச ராஜபக்ஸ, தெரிவித்துள்ளார் இந்தக் குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே கோட்டாபய... Read more »

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இதுவரையில் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள், அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாக்காளர் அட்டைகளை, எதிர்வரும் 18, 19, 20 மற்றும் 21ஆம் திகதிகளில் பெற்றுக்கொள்ள முடியுமென பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித... Read more »

இலங்கையை உலுக்கிய பெரும் சோகம் – தாயும் மகனும் மரணம்!

தென்னிலங்கையில் மகனின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத தாயும் உயிரிழந்த சோகமான சம்பவம் பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. பிங்கிரிய, பிரசன்னகமகம்மன பகுதியை சேர்ந்த 45 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான சஞ்சீவ பிரசன்ன மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த 70 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்... Read more »

தேரர் ஒருவர் கைது- பொலிஸார் வெளியிட்ட காரணம்!

செல்லுபடியற்ற சாரதி அனுமதி பத்திரத்துடன் காரை செலுத்திச் சென்ற குற்றச்சாட்டில் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட தேரர், கண்டியில் இருந்து குளியாப்பிட்டிய கந்தானேகெதர பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றை நோக்கி காரில் பயணித்துக்கொண்டிருக்கும் போது குருணாகல் போக்குவரத்து பொலிஸாரால்... Read more »