டீசல் விலை மூன்று ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள போதும் நாம் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க மாட்டோம் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவிப்பு..! எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் திருத்தப்பட்டுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது... Read more »
காலாவதியான பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்ட பல களஞ்சியசாலைகள் சுற்றிவளைப்பு ! எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தகவல்களை மாற்றி சந்தையில் வெளியிடுவதற்கு தயார்படுத்தப்பட்டருந்த இறக்குமதி செய்யப்பட்ட கடலை, அரிசி மற்றும் காலாவதியான பேரீச்சம்பழம் களஞ்சியப்படுத்தப்பட்ட பல களஞ்சியசாலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை சுற்றிவளைத்துள்ளது. ஆய்வு கூடங்களுக்கு விநியோகிப்பதற்கு... Read more »
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் வெற்றிக் கட்சியாக முன்னெடுக்கும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மைத்திரி, சந்திரிக்காவிடம் எழுத்து மூலம் கோரியுள்ளார். கட்சியை மீள கட்டியெழுப்புவதற்காக பூரண ஒத்துழைப்பினை... Read more »
அரசியல் மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளரும் பிரபல தொழில்முனைவோருமான கெலும் ஜயசுமண இன்று (01) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக... Read more »
கைவிலங்கிடப்படவுள்ள பலம்வாய்ந்த முன்னாள் அமைச்சர்! கடந்த அரசாங்கத்தின்போது அதிகாரமிக்க அமைச்சு ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, இது தொடர்பாக முன்னாள் பலம் வாய்ந்த... Read more »
பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும்! மஹிந்த தேஷப்ரிய எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.... Read more »
நிலவும் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து லாஃப் எரிவாயு சந்தைக்கு வெளியிடப்படவில்லையென எரிவாயு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் சில வாரங்களாக லாஃப் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நுகர்வோர் மற்றும்... Read more »
நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 24 மாவட்டங்களில் 53,888 குடும்பங்களைச் சேர்ந்த 143,726 பேர் இன்னும் பாதுகாப்பான இடங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளதாக செய்திகள்... Read more »
ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கம் எடுக்கும் சரியான தீர்மானங்களுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வில் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் நாட்டிற்கு 300 மில்லியன் டொலர்கள் கிடைக்கும்,... Read more »
அரசுக்கு எதிராக மக்களை தூண்டும் விதத்தில் , வடக்கில் தமிழீழ நினைவேந்தல் நிகழ்வுகளை ஊக்குவிப்பது போன்ற பொய்யான விளம்பரங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்ட குற்றத்திற்காக பத்தேகம கிரிபத்தாவில பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு பத்தேகம பதில் நீதவான்... Read more »

