சுற்றுலாதுறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

இலங்கையில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி... Read more »

தீபாவளி அன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது!

எதிர்வரும் தீபாவளி தினத்தன்று (24-10-2022) மின்வெட்டை அமுலாக்காதிருக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 3 தினங்களுக்கான மின் தடை அறிவித்தலை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று (21-10-2022) மாலை அறிவித்துள்ளார். இதன்படி, நாளை... Read more »
Ad Widget

கொழும்பில் வசிக்கும் மக்களுக்கான அறிவிப்பு!

கொழும்பில் உள்ள பல பகுதிகளில் நாளை (22-10-2022) அமுல்ப்படுத்த திட்டமிட்டிருந்த 14 மணி நேர நீர்வெட்டு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நாளை இரவு 10 மணி முதல், நாளை மறுநாள்... Read more »

ஊழல் நிறைந்த இலங்கை வங்கி தலைவரை நீக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்கள்

இலங்கை வங்கியின் ஊழல் நிறைந்த தலைவரை நீக்கக்கோரி, தற்போது கொழும்பு கோட்டை, இலங்கை வங்கியின் தலைமையகத்துக்கு முன்பாக போராட்டம், முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டத்தில் இலங்கை வங்கி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் இலங்கை வங்கியின் தலைவரை பதவி நீக்கம் செய்து, வங்கியை பாதுகாக்கும்... Read more »

யாழில் வீதியால் சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென தீ பற்றியது!

யாழ்ப்பாணம் – மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு அருகாமையில் வாகனம் ஒன்று தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்துள்ளது. யாழ். வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த வாகனம் திடீரென தீப்பற்றியது என பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் தீ விபத்து நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளது (21-10-2022)... Read more »

இந்தியாவில் இருந்து யாழிற்கு கொண்டு வரும் நோக்கில் மறைத்து வைக்கப்பட்ட வெடி பொருட்கள் கடற்படையினரால் மீட்பு!

இந்தியாவில் இருந்து கடல்வழியாக யாழ்ப்பாணத்திற்கு கடத்திவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 ஜெலினைற் வெடி மருந்து குச்சிகளை நேற்று கடற்படையினர் மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக ஊர்காவல்துறை பொலிசார் தெரிவித்தனர். கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் கக்கடைதீவுற்கு சென்ற... Read more »

விடுதி ஒன்றில் பொலிசார் மேற்கொண்ட இரகசிய சுற்றிவளைப்பில் மூவர் கைது!

கல்கிஸ்ஸை – ரத்மலான பிரதேசத்தில் ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது ஆயுர்வேத நிலைய உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸாருக்கு ரகசிய தகவல் கல்கிஸ்ஸை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின்... Read more »

நாட்டில் இறக்குமதி பொருட்கள் சிலவற்றுக்கான தடை நீக்கம்!

அழகுசாதன பொருட்கள் வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் ஏற்றுமதி நோக்கிலான ஆடை உற்பத்தி மூலப்பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதித் தடை எதிர்வரும் இரண்டு வாரங்களில் நீக்கப்பட உள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனை அறிவித்துள்ளார். குறித்த துறைகளின் பணியாளர்களினால் தொடர்ந்து முன்வைக்கப்படும்... Read more »

புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. க.பொ.த. உயர்தரப் பரீட்சை அதேநேரம், க.பொ.த.... Read more »

நாட்டில் அறிமுகமாகும் புதிய ஓய்வூதிய முறை!

புதிய முறைமை வரிச் செலுத்துகையின் அடிப்படையிலான ஓய்வூதிய முறைமையொன்று அறிமுகம் செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. சமூகப் பாதுகாப்பு சபையின் ஊடாக முயற்சியான்மையாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது வரி செலுத்துவோருக்கான திட்டம் உற்பத்தியாளர்கள் மற்றும் முயற்சியான்மையாளர்களுக்கு எவ்வித... Read more »