இந்தியாவில் இருந்து யாழிற்கு கொண்டு வரும் நோக்கில் மறைத்து வைக்கப்பட்ட வெடி பொருட்கள் கடற்படையினரால் மீட்பு!

இந்தியாவில் இருந்து கடல்வழியாக யாழ்ப்பாணத்திற்கு கடத்திவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 ஜெலினைற் வெடி மருந்து குச்சிகளை நேற்று கடற்படையினர் மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக ஊர்காவல்துறை பொலிசார் தெரிவித்தனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் கக்கடைதீவுற்கு சென்ற கடற்படையினர் அங்கு மறைத்துவைகக்கப்பட்டிருந்த 400 ஜெலினைற் வெடி மருந்து குச்சிகளை மீட்டனர்.

இதேவேளை கக்கடை தீவில் மனிதர்கள் வாழுவதில்லை எனவும் அங்கு இந்தியாவில் இருந்து கடல்வழியாக இந்த வெடி பொருட்களை கொண்டுவரப்பட்டு மறைத்துவைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor