விடுதி ஒன்றில் பொலிசார் மேற்கொண்ட இரகசிய சுற்றிவளைப்பில் மூவர் கைது!

கல்கிஸ்ஸை – ரத்மலான பிரதேசத்தில் ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஆயுர்வேத நிலைய உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு ரகசிய தகவல்
கல்கிஸ்ஸை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், 22,25 மற்றும் 29 வயதுடைய வதுராவ, கடுகஸ்தொட்ட மற்றும் வல்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor