உலக மக்கள் தொகை அதிகரிப்பு!

அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புத் திணைக்களத்தின் படி, 2023 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 75 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்குள் உலகம் முழுவதும் 08 பில்லியன் மக்கள் வாழ்வார்கள் என அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.... Read more »

எப்போதும் இல்லாத போரை எதிர்கொள்கிறது ஹமாஸ் : தலைவர் கருத்து

முன் எப்போதும் எதிர்கொண்டிராத போரை தற்போது எதிர்கொண்டு வருவதாக ஹமாஸ் தலைவர் யாயா சின்வர் முதன்முறையாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஹமாஸ் இயக்கம், கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. காசாவின் எல்லையோரத்தில் உள்ள இஸ்ரேலின் நகரங்கள் மீது இந்த... Read more »
Ad Widget

புதுவருட பாதுகாப்பில் 6,000 காவல்துறை மற்றும் ஜொந்தாமினர்!

புதுவருட நிகழ்வுகளை முன்னிட்டு தலைநகர் பரிசில் காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் என மொத்தம் 6,000 வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். இன்று டிசம்பர் 29, வெள்ளிக்கிழமை இதனை உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்தார். 44 படைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பரிஸ் முழுவதும் அவர்கள் கண்காணிப்பில்... Read more »

8 பில்லியனை எட்டும் உலக சனத்தொகை

உலக மக்கள் தொகை 2023ஆம் ஆண்டில் 75 மில்லியன் அதிகரித்துள்ளதுடன் புத்தாண்டு தினத்தில் அது 8 பில்லியனை தாண்டும் என அதிகமாக இருக்கும் என அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய சனத் தொகை... Read more »

புத்தாண்டு கொண்டாட் தடை:

பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டின் இடைக்கால பிரதமர் அன்வர்-உல்-ஹக் கக்கரே வெளியிட்டுள்ளார். காஸாவில் நிலவும் போர் சூழ்நிலையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் ரெிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்கள் அனைவரும் பாலஸ்தீனத்தின் மோசமான சூழ்நிலையை... Read more »

டொனால்ட் டிரம்புக்கு விழுந்த அடுத்த அடி

2020ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தோல்வி அடைந்தார். ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்ததால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையிலும் ஈடுபட்டனர். வன்முறையை தூண்டியதாக... Read more »

லைபீரியாவில் பெட்ரோல் கொள்கலன் வெடிப்பு: 40 பேர் உயிரிழப்பு

ஆபிரிக்க நாடான லைபீரியாவில் உள்ள டொயோட்டாவில் பெட்ரோல் கொள்கலன் வெடித்து சிதறியதில் 40 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 83 பேர் காயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக லைபீரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டொயோட்டாவில் எண்ணெய் கொள்கலன் வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான... Read more »

ஆசிய நாடுகளின் பாதுகாப்பை பலப்படுத்த ஆயுதங்களை வழங்க தயாராகும் ஜப்பான்

வட்டாரப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் தென்கிழக்கு ஆசியாவுக்கு ஆயுதங்களை வழங்கும் திட்டத்தை ஜப்பான் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் பாதுகாப்பு மோசமடைந்து வரும் சூழலைக் கருத்திற்கொண்டு தென்கிழக்கு ஆசிய வட்டாரத்தில் உள்ள நாடுகளுக்கு ஆயுதங்களை நேரடியாக ஏற்றுமதி செய்வது தொடர்பில் ஜப்பான் ஆரர்யு்நு்த... Read more »

காஸாவில் நிரந்த போர் ஏற்படுத்த வேண்டும்

காஸாவில் நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமேனுவல் மெக்ரோன் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மனிதாபிமான நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சந்தர்ப்பத்தில் அவர் இந்த கோரிக்கை விடுத்துள்ளார். காஸாவில்... Read more »

கனேடிய அரசின் உயரிய விருது பெரும் தமிழர்

கனேடிய அரசின் உயரிய விருதான “ஓடர் ஓப் கனடா” (Order of Canada) தமிழரான அருண் ரவீந்திரன் உள்ளிட்ட 78 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனநல ஆராய்ச்சி குறித்த அவரது பங்களிப்புகளுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஆளுநர் நாயகம் ஜெனரல் மேரி சைமன், அருண்... Read more »