கென்ய நாடாளுமன்றத்திற்கு தீவைத்த போராட்டக்காரர்கள் – ஐவர் பலி

கென்யாவில் வரி அதிகரிப்பு சட்டமூலத்திற்கு எதிராக பாரியளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கமைய, கென்ய நாடாளுமன்றத்தை இன்று (25) முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், இந்த சம்பவத்தில் சுமார் 31 பேர் காயமாடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »

நிலவில் இருந்து மண் மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பிய சீன விண்கலம்

சீனாவினால் நிலவுக்கு அனுப்பப்பட்ட Chang’e 6 விண்கலம் அங்கிருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளுடன் வெற்றிகரமாக இன்று பூமிக்கு திரும்பியுள்ளது. இந்த ஆய்வு விண்கலம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வடக்கு சீனாவில் உள் மங்கோலியன் பகுதியில் தரையிறங்கியயதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலவில் இருந்து... Read more »
Ad Widget

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் விடுதலை

அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் ஜூலியன் அசாஞ்சே மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரித்தானியச் சிறைச்சாலையில் இருந்து விக்கிலீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே 5 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் அமெரிக்க இரகசிய... Read more »

ரஷ்ய தேவாலய தாக்குதல்: அருட்தந்தை உட்பட 20 பேர் பலி

ரஷ்யாவின் வடக்கு ககாசஸின் தாகெஸ்தான் பகுதியிலுள்ள தேவாலயங்களில் கடந்த 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் அருட்தந்தை, பொலிஸார் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். அதில் தாக்குதல் மேற்கொண்டவர்களை நோக்கி பொலிஸார் நடத்திய துப்பாக்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தாக்குதல்... Read more »

ஆங்கில கால்வாயை ஒரேநாளில் கடந்த 882 புகலிடக் கோரிக்கையாளர்கள்

அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஆங்கில கால்வாயைக் கடந்து இங்கிலாந்து நாட்டுக்கு ஒரே நாளில் 882 பேர் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டு உள்துறை அலுவலகம் வெளிப்படுத்திய தகவலின் அடிப்படையில், 711 பேர் தான் ஒரே நாளில் அதிகமாக கடந்ததாக... Read more »

பிரிக்ஸ் அமைப்பில் இணையும் மலேசியா

வளரும் பொருளியல்களின் கூட்டமைப்பான ‘பிரிக்ஸ்’ அமைப்பில் சேர்வதற்கான் ஆயத்தப் பணிகளை மலேசியா விரைவில் தொடங்கும் என பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். சீன ஊடகமான குவான்சாவிற்கு அளித்த நேர்காணலில் அவர் இதை கூறியுள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகியவை இணைந்து ஏற்படுத்திய... Read more »

வடகொரியாவை மேற்குலகம் கட்டுப்படுத்த முடியாது

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின், 24 ஆண்டுகளின் பின் இன்று செவ்வாய்க்கிழமை வடகொரியாவுக்குச் சென்றார். வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் கடந்த 70 ஆண்டுகளாக நட்புறவு நிலவி வருகிறது. என்றாலும், வடகொரியாவில் நிலவும் அரசியல் நிலைமைகளின் காரணமாக ரஷ்ய தலைவர்கள் அங்கு செல்வதில்லை. இறுதியாக புடின்... Read more »

ஹிந்துஜா குடும்பம் மீது சுவிஸ் நீதிமன்றில் குற்றச்சாட்டு

பிரித்தானியாவின் முதல்நிலை செல்வந்தர்களான ஹிந்துஜா குடும்பம் ஒரு பணியாளரை விட செல்லப்பிராணியான நாய்க்கு அதிக செலவு செய்துள்ளதாக சட்டத்தரணிகள் நீதிமன்ற அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளனர். சட்டத்தரணிகளின் கூற்றுப்படி, ஹிந்துஜா குடும்பம், பணியாளர் ஒருவரை நாள் ஒன்றுக்கு 18 மணிநேரம், வாரத்தில் ஏழு நாட்கள், வெறும்... Read more »

ஒரே பாலின திருமணத்திற்கு தாய்லாந்தில் அங்கிகாரம்

திருமண சமத்துவச் சட்டத்தின் இறுதி வாசிப்பை நிறைவேற்றியது தாய்லாந்தின் செனட் செவ்வாயன்று நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் நேபாளம் மற்றும் தைவானைத் தொடர்ந்து ஒரே பாலினத்தவர்களை அங்கீகரிக்கும் ஆசியாவின் மூன்றாவது நாடாக தாய்லாந்து மாறியுள்ளது. இந்த சட்டம் ஏறக்குறைய அனைத்து மேலவை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப்... Read more »

மலாவி துணை ஜனாதிபதியின் இறுதிச் சடங்கு: கூட்டத்துக்குள் புகுந்த காரினால் நால்வர் பலி

ஆபிரிக்க நாடான மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா, மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 10 பேர் விமான விபத்தில் உயிரிழந்தனர். இந்நிலையில் அவரது சொந்த ஊரான சைப்பே நகரத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. இறுதிச்சடங்கில் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.... Read more »