பாகிஸ்தானின் தேசிய விமான சேவை விற்பனை, 98 வீத பணிகள் நிறைவு

பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை விற்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், கடந்த ஜூன் மாதம் அந்நாட்டு அதிகாரிகள் பொருளாதார... Read more »

உலக வங்கியிடமிருந்து $150 மில்லியன் டொலர்களை கடனாக பெறவுள்ள இலங்கை

உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி சங்கத்திடமிருந்து (IDA) 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிதித்துறை பாதுகாப்பு வலையமைப்பினை வலுப்படுத்தும் திட்டத்தினை வலுப்படுத்தும் நோக்குடன் இந்த கடன் தொகை பெறப்படவுள்ளது. இந்தத் திட்டம் மத்திய வங்கியால்... Read more »
Ad Widget

அமெரிக்கா விசா கட்டணங்களை அதிகரித்துள்ளது

H-1B, L-1, EB-5 மற்றும் குடியேற்றம் அல்லாத ஏனைய விசாக்களுக்கான விண்ணப்பக் கட்டணங்களை அதிகரித்துள்ளதாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த கட்டண அதிகரிப்பிற்கு அமைய வெளிநாடுகளின் தொழில்நுட்ப நிபுணர்களால் பயன்படுத்தப்படும் H-1B விசா கட்டணம் 460 டொலரில் இருந்து 780 டொலராக அதிகரித்துள்ளது. H-1B... Read more »

கென்யாவில் எரிவாயு வெடித்ததில் இருவர் பலி: 165 பேர் காயம்

கென்யாவின் தலைநகர் நைரோபியில் (Nairobi) எரிவாயு வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், சுமார் 165 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். நைரோபி – எம்பகாசி பகுதியில் உள்ள எரிவாயு நிரப்பு நிறுவனம் ஒன்றிலே இவ்வாறு எரிவாயு வெடித்துள்ளதுடன், தீ பற்றி எரிந்ததில்... Read more »

ஆளில்லாத தாக்குதல் விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்யும் அமெரிக்கா

31 MQ-9B ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஆளில்லா தாக்குதல் விமானங்களை (ட்ரோன்) இந்தியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த தீர்மானம் குறித்து அமெரிக்க காங்கிரஸுக்கு அறிவித்து தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம்... Read more »

நீர்மூழ்கி கப்பல்களை கொள்வனவு செய்யும் பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான முதலாவது நீர்மூழ்கிக் கப்பலை கொள்வனவு செய்வதற்கான ஒப்புதலை அந்நாட்டு ஜனாதிபதி பேர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் வழங்கியுள்ளார். பிலிப்பைன்ஸ் இராணுவத்தின் மூன்றாம் கட்டமாக நவீனமயப்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்த நீர்மூழ்கி கப்பல் கொள்வனவு செய்யப்பட உள்ளது. தென் சீனக் கடலில் நிலவி வரும்... Read more »

ஐரோப்பிய பாராளுமன்றம் மீது முட்டை வீச்சு: விவசாயிகள் கைது

ஐரோப்பிய பாராளுமன்றம் பலத்த அடிவாங்கியுள்ளது. இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டுவரும் பிரான்ஸ விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டம் இரண்டு வாரங்களை அண்மித்துள்ளது. சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் பிரான்ஸின் செயற்பாடுகளை முடக்கும் அளவுக்கு வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மீது... Read more »

பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் மார்க் ஸக்கர்பர்க்

சமூக ஊடகங்களால் தங்கள் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகக் கூறிய குடும்பத்தினரிடம் Meta CEO Mark Zuckerberg மன்னிப்பு கேட்டார். மெட்டா உள்ளிட்ட உலகின் முன்னணி சமூக ஊடக வலையமைப்பு நிறுவனங்களின் தலைவர்களை அமெரிக்க செனட் சபையின் முன் அழைக்கப்பட்ட போதே அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.... Read more »

பாகிஸ்தானில் பொது தேர்தல் வேட்பாளர் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் பெப்ரவரி 8ஆம் திகதி பொது தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானை ஒட்டிய ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள பஜார் என்ற பழங்குடியின மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளரான ரெஹான் ஜெப் கான் என்பவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூட்டு நடத்தியுள்ளனர். மேலும், அவருடன் இருந்த... Read more »

உக்ரேனுக்கு மேலும் 50 பில்லியன் யூரோ உதவித் தொகை

அனைத்து 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் உக்ரேனுக்கு மேலதிகமாக 50 பில்லியன் யூரோ (54 பில்லியன் அமெரிக்க டொலர்) உதவி தொகையை வழங்க ஒப்புக் கொண்டுள்ளன. இந்தத் தகவலை ஐரோப்பிய ஒன்றிய பேரவையின் தலைவர் சார்லஸ் மைக்கேல் சமூக ஊடகத் தளமான எக்ஸில்... Read more »