ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் இன்று (04) மாலை பொரளை மயானத்திற்கு சவப்பெட்டியுடன் சென்றுள்ளனர். குறித்த குழுவினர் பொரளை மயானத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எதிர்த்ததால் இரு குழுக்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.... Read more »
அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நாடு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அடக்குமுறை ஆட்சியாளர்களிடம் இருந்து நாட்டை மீட்க வேண்டும் எனவும் சரியான தலைவரை நாட்டுக்கு தெரிவு செய்ய வேண்டும் எனவும் கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பு பொரளை அனைத்து... Read more »
இடைநிறுத்தப்பட்டுள்ள பாராளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் எதிர்வரும் 7 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாக உள்ளது. இதன் போது, அரசியல் கட்சித் தாவல்கள் நடைபெறலாம் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் ஜனாதிபதி சம்பிரதாயபூர்வமான தனது கொள்கை விளக்க உரையை நிகழ்த்திய... Read more »
பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்புக்காக உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சு ஊழியர் ஒருவரை உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சத்யேந்திர சிவால் என்ற இந்த நபரல், இந்திய தூதரகம், பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார... Read more »
கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் மிகவும் மோசமாகவும், மிலேச்சத்தனமாகவும் நடந்துகொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், பெண்களிடமும், பல்கலைக்கழக மாணவர்களிடமும் காட்டுமிராண்டித் தனமாக பொலிஸார் நடந்துகொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் இன்று பாரிய... Read more »
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் உருவாக்கப்பட உள்ள மிகப் பெரிய அரசியல் கூட்டணியை சீர்குலைத்து, பிளவுப்படுத்த ஒரு அணிக்கு அரசியல் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், இந்த அணியினர் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி அமைக்கப்படும்... Read more »
“அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் அமுலில் இருக்கும்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க முற்பட்டால் அது ஒற்றையாட்சிக்கும் அச்சுறுத்தலாக அமையும்.” இவ்வாறு சுதந்திர மக்கள் சபையின் பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன எச்சரித்துள்ளார். “மாகாணசபைகளுக்கு தற்போது அதிகாரம் இல்லை, உள்ளாட்சிசபைகளுக்கும் அதிகாரம் இல்லை, ஏனெனில்... Read more »
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வசந்த மண்டபத்தினுடைய திரைச்சீலையில் அம்மனின் உருவத்தினை பாபிராஜ் தேவராஜா என்ற இளைஞர் தத்ரூபமாக வரைந்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இலங்கையில் தாய்தெய்வ வழிபாட்டின் மிகு தொன்மைக்குச் சான்றாக நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் விளங்குகின்றது.... Read more »
செயலாளர் பதவியை சுமந்திரன் கேட்டது பிழை என இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரஜனி ஜெயப்பிரகாஸ் தெரிவித்துள்ளார். ஊடக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது “இரு அணிகளாக பயணிப்பது... Read more »
சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. இலங்கையின் 76 வது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்தநிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக... Read more »

