பெரும்போகத்திற்கான நீரை திறந்துவிட நடவடிக்கை

பெரும்போகத்திற்கான நீர் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் திறந்துவிடப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் கன்னொருவ விவசாய திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை

நடைபெறவுள்ளதாக அதன் செயலாளர் எம்.பி.எம்.விக்ரமசிங்க தெரிவித்தார்.

மகாவலி அதிகாரசபை, விவசாய திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் அதிகாரிகள் இதன்போது கலந்து கொண்டுள்ளனர்.

இந்த வருடம் 08 இலட்சம் ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் பெரும்போகத்திற்கான நீர் கொள்ளளவு போதுமானளவு இருப்பதாக எம்.பி.எம்.விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin