புலி சின்ன ஆடை அணிந்த இளைஞனுக்கு பிணை: சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவு

மாவீரர் தினம் அன்று, கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு விடுதலைப்புலிகளின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவரின் படம் பொறித்த ஆடையுடன் வந்த இளைஞனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது, சாவகச்சேரி நீதிமன்றில் குறித்த வழக்கு, இன்றைய தினம் புதன்கிழமை எடுக்கப்பட்ட போது, கடந்த... Read more »

யாழில் பௌத்த கொடியுடன் கரையொதுங்கிய தெப்பம்: மக்கள் குழப்பம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் தெப்பம் ஒன்று இன்றைய தினம் கரையொதுங்கி உள்ளது. பௌத்த கொடிகளுடன் குறித்த தெப்பம் கரையொதுங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த தெப்பம் குறித்து மக்கள் மத்தியில குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது Read more »
Ad Widget

தாய்லாந்து வெள்ளத்தில் 6 பேர் மரணம்

தாய்லாந்தின் தென் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டில் பெய்து கனமழை காரணமாக கடந்த 22ஆம் திகதி முதல் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சத்துன், சொங்க்லா, பட்டாணி, யாலா, நராத்திவாட் ஆகிய தென் மாநிலங்களில் 70... Read more »

சம்பந்தனுடன் நியூசிலாந்து தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் இன்று விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர் ஸ்தானிகரான அப்பிள்டன் தனது பதவிக்காலத்தை ஜனவரி முதல் வாரத்துடன் நிறைவு செய்யவுள்ளார். இதனையடுத்து அவர்... Read more »

வடக்கு ரயில் பாதை ஆறு மாதங்களுக்கு மூடப்படும்

வடக்கு புகையிரத பாதையை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக 07 ஆம் திகதி முதல் வடக்கு ரயில்வே பாதையின் மஹவ தொடக்கம் அநுராதபுரம் வரையான பகுதி 06 மாத... Read more »

பொது வேட்பாளராக போட்டியிட தயார் என்கிறார் தயாசிறி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தானும் பொது வேட்பாளராக போட்டியிட தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இடதுசாரி கட்சிகளுக்கு வேட்பாளர் ஒருவர் இல்லை என்பதுடன் அவர்கள் கைவிடப்பட்ட நிலைமையில் உள்ளனர்.... Read more »

துறைமுக அதிகாரசபையின் போராட்டம்: நீதிமன்றம் தடை உத்தரவு

துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கங்கள் நாளைய தினம் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் துறைமுக ஊழியர்களின் சம்பள உயர்வு அறிவிக்கப்படவில்லை. அதுதொடர்பான வேலைத்திட்டத்தை அடுத்த 7 நாட்களுக்குள் அறிவிக்குமாறும், இல்லையேல் 28ஆம் திகதி... Read more »

ரொனால்டோ சாதனை: பீஃபா வைத்துள்ள டுவிஸ்ட்

கால்பந்து போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் வீரராக திகழும் போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நடப்பு ஆண்டில் அதிக கோல் அடித்த வீரர்களில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். அல் இட்டிஹாத் அணிக்கு எதிரான சவுதி புரோ லீக் போட்டியில் அல் நாசர் அணி... Read more »

ரஷ்ய மருத்துவரிடம் கொள்ளையிட்ட பெண்

ரஷ்யாவில் இருந்து செயல்முறை பயிற்சிக்காக பாணந்துறை கேத்துமதி பெண்கள் வைத்தியசாலைக்கு வந்த இலங்கை மருத்துவர் ஒருவரின் பயண பொதியில் இருந்து நவீன ஐ.பேட்,பவர் பேங்,ஏ.டி.எம். அட்டையை கொள்ளையிட்டு பணத்தை பெற்றுக்கொண்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டாரகம பிரதேசத்தை... Read more »

கண்டியில் மரம் முறிந்து விபத்து: இருவர் காயம் – ஏழு வாகனங்கள் சேதம்

கண்டியில் இரண்டு மரங்கள் முறிந்து விழுந்து விபத்து – இருவர் காயம் – ஏழு கார்கள் சேதம் கண்டி திலக் ரத்நாயக்க மாவத்தையில் இரண்டு மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், ஏழு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அரச மரமொன்றும்... Read more »