இன்றைய ராசிபலன் 08.10.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தொழில், வேலை தொடர்பான விஷயத்தில் கலவையான பலன்கள் கிடைக்கும். சிலரின் செயல்பாடு மன வருத்தத்தைத் தரும். குழந்தைகளின் விஷயத்தில் ஏமாற்றமான செய்திகள் கிடைக்கும். இன்று அன்புக்குரியவர்களே சந்திக்கவும் அவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடவும் வாய்ப்பு கிடைக்கும்.... Read more »

ஐசிசி விருதுக்கான பரிந்துரையில் கமிந்து, பிரபாத்

2024 செப்டெம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான தேர்வுப் பட்டியலில் இலங்கை நட்சத்திரங்களான கமிந்து மெண்டீஸ் மற்றும் பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த தேர்வில் மூன்றாவது வீரராக அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட நட்சத்திரம் டிராவிஸ் ஹெட்டும் உள்வாங்கப்பட்டுள்ளார். பிரபாத் ஜெயசூர்யா இடது... Read more »
Ad Widget

2024ஆம் ஆண்டின் நோபல் பரிசு: அமெரிக்க மருத்துவர்கள் இருவர் தெரிவு

2024ஆம் ஆண்டுக்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மைக்ரோ ஆர்.என்.ஏ.வை கண்டுபிடித்தமை, மரபணு முறையில் அதன் பங்கு குறித்த ஆராய்ச்சிக்காக அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள் விக்டர் ஆம்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது. இவர்கள் இருவரது கண்டுபிடிப்பானது,... Read more »

இமேஷா முத்துமாலா சிஐடியின் வரலாற்றை புரட்டிப் போடுவாரா?

இந்த நாட்டில் இடம்பெற்ற அரசியல் குற்றங்களைப் போன்று, கடந்த காலங்களில் நிதிக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் பாரியளவில் சீர்குலைந்திருந்த நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) உள்ளிட்ட நிறுவனங்களின் மறுசீரமைப்புப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி... Read more »

“கடவுளின் உதவியால் வெற்றி உறுதி”: நெதன்யாகு கூறுகிறார்!

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவைக் குறித்து லெபனான் எல்லையில் இருக்கும் இஸ்ரேல் இராணுவ முகாம்களை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பார்வையிட்டுள்ளார். இதுகுறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. “வடக்கு எல்லையில்... Read more »

சுற்றுலாத் துறை வருவாய்: 2.35 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டுகிறது

இலங்கையின் சுற்றுலாத் துறையில் சில தளர்வுகள் இருந்தபோதிலும் கடந்த செப்டெம்பர் மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் வருவாய் ஆகிய இரண்டிலும் இலங்கை முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் சுற்றுலாத் துறையின் மூலம் இலங்கை 181.0 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக... Read more »

தகுதியறிந்து வேட்புமனு வழங்கப்பட வேண்டும்

பொதுமக்கள் அகௌரவத்திற்கு உள்ளான வேட்பாளர்களுக்கு வேட்புமனு வழங்காமலிருக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மார்ச் 12 அமைப்பு அனைத்து அரசியல் கட்சி, சுயாதீன குழுக்களுக்கு அறிவித்துள்ளது. தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கும் நோக்கில் சந்தேகத்திற்கு, அதிருப்திக்கு மற்றும் பொதுமக்கள் அகௌரவத்திற்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு இம்முறை நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்புமனு... Read more »

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்தது மாணவி மரணம்

கொழும்பு, தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து முன்னணி சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் குதித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சி.சி.ரிவி காட்சிகளின் படி, மாணவி கோபுரத்தின் 29வது மாடியில் இருந்து குதித்துள்ளதாக கொழும்பு தாமரைக்... Read more »

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளராக களமிறங்கும் அமரர் ரவிராஜ் அவர்களின் துணைவியார் சசிகலா ரவிராஜ்!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அமரர் ரவிராஜின் துணைவியார் சசிகலா ரவிராஜ் போட்டியிடவுள்ளார். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவில் 07-10-2024 அன்றைய தினம் அவர் கையெழுத்திட்டார். இதன்போது ரெலொ அமைப்பின் ஊடகப்... Read more »

கிளிநொச்சி மருத்துவமனையில் இரண்டரை வயதுக் குழந்தைக்கு பாரதூரமான ஊசிமருந்து – பெண் மருத்துவரின் அலட்சியம்

நாய் கடிக்கு இலக்கான இரண்டரை வயது ஆண் குழந்தைக்கு, அதி வீரியமான பாரதூரமான (ஓவர்டோஸ்) ஊசி மருந்தை மருத்துவர் பரிந்துரைத்த நிலையில், தாதிய உத்தியோகத்தர் அதைக் கவனித்தமையால் பின்னர் சரியான ஊசி ஏற்றப்பட்ட சம்பவம் நேற்றுமுன்தினம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது. இரண்டரை வயதுக்... Read more »