வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரம் தொடர்பில் கைது செய்ப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் தமக்கு நீதிக்கோரி வவுனியா சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டு பேரையும் எதிர்வரும் 19 ஆம்... Read more »
இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு நடைபெற்றது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளர்... Read more »
தனது மூன்றரை வயதுடைய குழந்தையை இலங்கை பணிப் பெண்ணிடம் விட்டுவிட்டு நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற சீனப் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய சீனப் பெண்ணொருவர் நேற்று (12) இரவு விமானத்தில் ஏறத் தயாராகிக்... Read more »
குறுஞ்செய்திகள் ஊடாக தபால் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற குறுஞ்செய்திகளுக்கு மக்கள் தங்களின் இரகசிய தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு தபால் திணைக்களம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை தபால் திணைக்களம் மூலம் வழங்கப்படும் பொதிக்கான கட்டணத்தை செலுத்துமாறு... Read more »
கனடாவில் கடந்தவாரம் ஆறு இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கை ஊடகங்களின் முக்கியச் செய்தியாக இடம்பிடித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்கள் மூவரை கோடிட்டு கனேடிய ஊடகம் ஒன்று இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. “கடந்த மூன்று நான்கு நாட்களாக இலங்கை ஊடகங்களில் இந்த... Read more »
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் மார்ச் – 15 ஆம் திகதி வெளியாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலை (Online) மூலம் கோரப்படவுள்ளன. அத்துடன், கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் விண்ணப்பங்களைப்... Read more »
பிரித்தானியாவின் பொருளாதாரம் கடந்த ஜனவரியிலிருந்து வளர்ச்சியடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 2023 ஆம் ஆண்டு பொருளாதாரம் மந்தநிலையை அடைந்திருந்தது. தேர்தலுக்கு முன்னர் பிரதமர் ரிஷி சுனக் மக்களுக்கு நிவாரணம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. உள்நாட்டு உற்பத்தியானது மாதாந்தம் 0.2 வீதத்தினால் வளர்ச்சியடைந்துவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம்... Read more »
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களின் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை அணியின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை அணிக்கு எம்.எஸ்.தோனி இதுவரை காலமும் தலைவராக செயற்பட்டு வந்துள்ளதுடன், ஐந்து முறை ஐ.பி.எல் கிண்ணத்தையும் பெற்றுக்கொடுத்துள்ளனர். 42 வயதான அவர்... Read more »
இஸ்ரேல் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரைப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் இரண்டு பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனை பலஸ்தீனிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.இதேவேளை வெவ்வேறு சம்பங்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜெனின் நகரத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் முன்னால் இருந்தவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டுத்... Read more »
கடத்தபட்டு படுகொலை செய்யப்பட்ட தமது கணவனின் மரணத்திற்கு கடற்படையினரும் காரணம் என உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணம் – பொன்னாலை கடற்படை முகாம் முன்பாக நேற்று முன்தினம் கடத்தபட்டு, வாள் வெட்டுக்குள்ளாகி குடும்பஸ்தர் மரணமைந்திருந்தார். காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான தவச்செல்வம்... Read more »

