இலங்கையில் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும்!-பாட்டலி சம்பிக்க ரணவக்க

இலங்கையில் மக்களது போராட்டம் மீண்டும் கலவரமாக வெடிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தற்போது தணிந்துள்ளதே தவிர முற்றுப்பெறவில்லை.

வெகுவிரைவில் மீண்டும் இந்த போராட்டங்கள் கலவரமாக வெடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor