மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் யாழ் சர்வதேச விமான நிலையம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் 3ஆம் ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு சமய நிகழ்வும் கேக் வெட்டும் நிகழ்வும் நேற்று(17.10.2022) பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது.

மூன்று ஆண்டு நிறைவு

இதில் மூன்று ஆண்டுக்கான நிறைவின் பிரித்பாரயணம், சர்வமத ஆசியும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தின் பிரதான முகாமையாளர் ஆர்.எஸ்.டி குமாரசிறி ஜயதிலக,மற்றும் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி டி.எஸ்.ஜெந்தமால் அபயசிங்க, நிர்வாக அதிகாரி ஹபீர் ஆட்டிஸ் உள்ளிட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள் , மதத்தலைவர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor