அமெரிக்காவை கதறவிடும் ஈரான் – சீனா
பாரிய கச்சா எண்ணெய் வர்த்தகம்: பதற்றங்களுக்கு மத்தியிலும் தொடரும் ஏற்றுமதி!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் பதற்றங்கள் தீவிரமடைந்துள்ள நிலையிலும், ஈரான் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியைத் தடையின்றி முன்னெடுத்து வருகின்றது.
2026 பெப்ரவரி 28ஆம் திகதி போர்ச் சூழல் ஆரம்பமானதில் இருந்து தற்போது வரை சுமார் 11.7 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
முக்கிய பாதை: உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணை வழியாக இந்த ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.
ஈரானின் கச்சா எண்ணெயை அதிகளவில் கொள்வனவு செய்யும் நாடாகச் சீனா தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது.
சர்வதேச பொருளாதாரத் தடைகள் மற்றும் பிராந்திய போர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், பல பில்லியன் டொலர் பெறுமதியான இந்த வர்த்தகம் உலக எரிசக்தி சந்தையில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. காவற்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரின் பலத்த கண்காணிப்புக்கு மத்தியில் இந்த விநியோகப் பாதைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

