“கிவுல் ஓயா” அபாயத்தின் குறியீடா..?

“கிவுல் ஓயா” அபாயத்தின் குறியீடா..?

யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல் யாழ்.ஊடக அமையத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று(24.02.2026) இடம்பெற்றது.

ஊடக அமையத்தின் ஸ்தாபகர் இ.தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம் ஆகியோரும் யாழ்ப்பாண பல்கலைகழக கலைப்பீட பீடாதிபதி எஸ்.ரகுராம், பல்கலைழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், எல்லைக் கிராமங்களை சேர்ந்த மக்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான இந்தக் கலந்துரையாடலில், கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படும் விவகாரம் மற்றும் சுற்றுசூழல் பாதிப்புகள், யானை – மனித மோதல் போன்ற பாதகமான விளைவுகள் தொடர்பாக ஆராயப்பட்டன.

Recommended For You

About the Author: admin