அரசாங்கம் மீது சந்திரிக்கா குமாரதுங்க வைத்துள்ள முக்கிய விமர்சனங்கள்

அரசாங்கம் மீது சந்திரிக்கா குமாரதுங்க வைத்துள்ள முக்கிய விமர்சனங்கள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போதைய அரசாங்கத்தின் அரச சேவை நியமனங்கள் மற்றும் நிர்வாகக் குளறுபடிகள் குறித்து முன்வைத்துள்ள கடும் விமர்சனங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் (Facebook) பக்கத்தில் இது தொடா்பான கருத்துக்களைப் பதிவிட்டுள்ளாா்.

அரச சேவையின் கௌரவம் மற்றும் அதிகாரிகளின் நியமனங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி பின்வரும் மூன்று முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்:

தற்போதைய அரசாங்கம் தனது கட்சியின் ஆதரவாளர்களுக்கு, அவர்கள் தகுதியற்றவர்களாக இருந்தாலும் அரச பதவிகளை வழங்கி வருவதாக அவர் சாடியுள்ளார். இதன் மூலம் எஞ்சியிருக்கும் அரச சேவையும் அழிக்கப்பட்டு வருவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க (தற்போது விளக்கமறியலில் உள்ளவர்) குறித்து விசேடமாகத் தெரிவித்துள்ள சந்திரிக்கா , சமன் ஏக்கநாயக்க ஒரு நேர்மையான மற்றும் உயர்தர தொழில்முறை அதிகாரி என சான்றிதழ் அளித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டுப் பயண நிதி தொடர்பான விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து மறைமுகமான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் நீதி வழங்குவது என்பது சிலரை மட்டும் இலக்கு வைத்து (Selective Justice) செய்யப்படுவது நாட்டின் ஜனநாயக ஆட்சி முறைக்கு பாரிய அச்சுறுத்தல் என அவர் எச்சரித்துள்ளார்.

தற்போதைய அரசியல் தலைவர்களுக்கு நிர்வாக அனுபவம் குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அதற்கான மாற்றாக அரசியல் தலைவர்களிடம் அசைக்க முடியாத நேர்மை இருக்க வேண்டும் எனவும்
அனுபவமுள்ள தொழில்முறை அதிகாரிகள் மீது நம்பிக்கை வைத்து நாட்டை ஆள வேண்டும் எனவும் திறமையான அரச சேவை இல்லாமல் எந்தவொரு அரசாங்கமும் வெற்றிபெற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளாா்.

Recommended For You

About the Author: admin