கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை அதிபரிடம் விசாரணை மேற்கொள்ளும் கல்வி அமைச்சு!

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையில் அதிபர் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அந்தப் பாடசாலையின் ஆசிரியரை கண்டித்த சம்பவம் தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காரணம்
ஆசிரியர் தினமான கடந்த 6ஆம் திகதி தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் சுனில் நவரத்னவின் விரிவுரையை கவனமுடன் கேட்கவில்லை என ஆசிரியர் ஒருவரின் கையைப் பிடித்து இழுத்து அமரச் சொன்னதே இதற்குக் காரணம்.

இந்த நிகழ்ச்சி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆசிரியையின் கையை அதிபர் இழுத்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர், ஊழியர்களும் மறுநாள் கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகியிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதாக கல்வி அமைச்சு உறுதியளித்ததை அடுத்து அவர்கள் மீண்டும் கற்பித்தலை ஆரம்பித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor