கல்வி சீர்திருத்தத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை..!
எக்காரணத்தைக் கொண்டும் கல்விச் சீர்திருத்தத்தை கொண்டுவருவதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இன்று (18) கிரிபத்கொடவில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் மக்கள் ஒருங்கிணைப்பு அலுவலக வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

