மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது கொழும்பு பங்குச் சந்தை!

கொழும்பு பங்குச் சந்தையில் நேற்றைய தினம் எதிர்பாராத வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அதன் புள்ளி விபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பிடத்தக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அண்மைக்காலத்தில் பங்குச் சந்தையில் மீண்டும் முதலீடுகளை மேற்கொள்ளத் தலைப்பட்டிருந்தனர்.

கொழும்பு பங்குச் சந்தை மீண்டும் வீழ்ச்சி

இந்நிலையில் நேற்றைய தினம் 132.7 புள்ளிகள் அளவில் பங்குச்சந்தை சரிவை எதிர் கொண்டுள்ளது.

எஸ்.அண்ட் பீ ஸ்ரீலங்கா டுவெண்டி சுட்டெண்களும் 48.61 புள்ளிகள் அளவில் வீழ்ச்சியை சந்தித்திருந்தது.

நேற்றைய தினம் 69.7 மில்லியன் பங்குகள் பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்த நிலையில் பங்குச் சந்தையின் நிகர வர்த்தகம் இரண்டு பில்லியன் ரூபாவை எட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor