தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு..!
தெஹிவளை, கடற்கரை வீதி (மெரின் டிரைவ்) பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக இன்று (09) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த ஹோட்டலுக்கு முன்பாக மது அருந்திக்கொண்டிருந்த இருவர், அந்த ஹோட்டலின் உரிமையாளரின் தலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் தற்போது களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

