வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் கோவில் தேர்த்திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழா கடந்த 24 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது.
நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை சமுத்திர தீர்த்தத் திருவிழா நடைபெறவுள்ளது.
இன்றைய தேர்த் திருவிழாவின் போது பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.