அதிகரிக்கும் தாமரை கோபுரத்தின் வருமானங்கள்

தாமரை கோபுர முகாமைத்துவம் செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் கடந்த இருபது நாட்களாக 72.3 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக தாமரை கோபுர முகாமைத்துவ தலைவர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தாமரை கோபுரத்திலிருந்து பங்கீ ஜம்பிங் நிகழ்ச்சிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

பயணச்சீட்டுகள், நிகழ்வுகள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் மூலம் வருமானம் பெறுவதாக தெரிவித்தார்.

இதுவரை 127,300 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor