வீடொன்றிலிருந்து காணமல் போன சிறுமி உரப்பையினுள் சடலமாக மீட்பு!

வீடொன்றிலிருந்து காணாமல் போன நான்கு வயது குழந்தை ஒன்று உரப் பையில் கட்டி புதரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (07) பிற்பகல் குழந்தை உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் ஆனமடுவ திபுல்வெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. திபுல்வெவ ஏரிக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து குழந்தை உரப் பை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அருகில் மறைந்திருந்த 25 வயதுடைய நபர் ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் அவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தையை கடத்தியமைக்கான காரணம் வெளியாகவில்லை
நேற்று மதியம், வீட்டில் இருந்து தனியாக வெளியே சென்ற குழந்தையை, இவ்வாறு கை, கால்களை கட்டப்பட்டு உர பை ஒன்றில் கட்டிய நிலையில் புதரில் இருந்து மீட்கப்பட்டது. இதனையடுத்து குழந்தை குழந்தை ஆனமடுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

குழந்தையின் வீட்டில் இருந்து சுமார் 150 மீற்றர் தொலைவில் உள்ள முட்புதரில் குழந்தை அடங்கிய உரப் பை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குழந்தையை கடத்தியமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor