வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது..!

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது..!

வவுனியா மடுக்கந்த பகுதியில் காணி ஒன்றில் கஞ்சா செடி ஒன்றை பயிரிட்டு வளர்த்த ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றது.

 

அதே பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டதுடன் கஞ்சா செடியும் கைப்பற்றப்பட்டது.

 

கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

 

குறித்த கைது நடவடிக்கை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரகீத் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

Recommended For You

About the Author: admin