சிட்னி துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபர் சர்வதேச தீவிரவாதக் குழுவுடன் நெருங்கிய தொடர்பு.!

சிட்னி துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபர் சர்வதேச தீவிரவாதக் குழுவுடன் நெருங்கிய தொடர்பு.!

அவுஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள பொன்டாய் கடற்கரை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் இளையவரான நவீத் அக்ரம் (Naveed Akram), ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அவுஸ்திரேலியாவின் உள்நாட்டுப் புலனாய்வு அமைப்பின் கவனத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி சந்தேக நபருக்கு சிட்னியை தளமாகக் கொண்ட இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதக் குழுவுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் அவர்கள் பயன்படுத்திய வாகனத்தில், இரண்டு IS கொடிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. குறித்த தாக்குதலில் 10 வயதுடைய சிறுமி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், சம்பவத்தில் சுமார் 40 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். ‘ஹனுக்கா’ கொண்டாட்டத்தின்போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிசூடு நடத்திய தந்தை பொலிஸாரால் சுட்டுகொல்லப்பட்டதுடன், மகன் தீவிர சிகிச்சையி உள்ளதாகவும் அவுஸ்திரேலிய தகவகள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin