பேருவளை கடலில் மிதந்து வந்த 200 கிலோ போதைப்பொருள் மீட்பு..!

பேருவளை கடலில் மிதந்து வந்த 200 கிலோ போதைப்பொருள் மீட்பு..!

பேருவளை கடற்கரையில் இருந்து சுமார் இரண்டரை கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்து வந்த இரண்டு பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தப் பொதிகள் ஒவ்வொன்றும் சுமார் 100 கிலோகிராம் எடையுடையவை எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போதே இந்தப் பொதிகள் மீட்கப்பட்டன.

 

மீட்கப்பட்ட இந்தப் பொதிகளில் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

 

இவை கடலில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதால், கடல் மார்க்கமாக போதைப்பொருள் கடத்தல் முயற்சியொன்று தோல்வியடைந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin