தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஓய்வு !
தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று (வியாழக்கிழமை, நவம்பர் 13) உத்தியோகபூர்வமாகத் தனது பதவியில் இருந்தும், அரச சேவையில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சமன் ஸ்ரீ ரத்நாயக்க கடந்த 34 வருடங்களாக தான் ஓர் அரச அதிகாரியாகப் பணியாற்றியதாகவும் இப்போது ஓய்வு பெறவிரும்புவதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் 16ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார்.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாகத் தான் கடமையாற்றிய காலத்தில் தனக்கு உதவிய அனைத்து முன்னாள் மற்றும் இந்நாள் ஜனாதிபதிச் செயலாளர்கள், பல்வேறு அரச நிறுவனங்களின் அதிகாரிகள், முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் தனது நன்றியைச் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துக்கொண்டுள்ளார்.

