துருக்கி விமான விபத்தில் 20 பேர் உயிரிழப்பு

துருக்கி விமான விபத்தில் 20 பேர் உயிரிழப்பு

நேற்று காலை துருக்கியின் லாக்ஹீட் C-130EM ஹெர்குலஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

அஜர்பைஜானில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஜார்ஜியாவின் சிக்னாகி அருகே விமானம் விபத்துக்குள்ளானது.

ஜார்ஜிய விமான நிறுவன ஆணையத்தை மேற்கோள் காட்டி, துருக்கியில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனடோலு நிறுவனம், ஜார்ஜியா விமான மண்டலத்திற்குள் நுழைந்த சில நிமிடங்களில் விமானம் தொடர்பை இழந்ததாகக் கூறியது. விமானம் பேரிடர் அழைப்பை வெளியிடவில்லை என்று அது கூறியது.

சி-130 இராணுவ பொருட்கள் போக்குவரத்து விமானங்கள் துருக்கி ஆயுதப்படைகளால் வெகுஜன போக்குவரத்து மற்றும் விநியோக நடவடிக்கைகளை கையாள பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ராய்ட்டர்ஸ் மற்றும் ஏபி அறிக்கைகளின்படி, விபத்து நடந்த இடம் அஜர்பைஜான்-ஜார்ஜியா எல்லைக்கு அருகிலுள்ள ஒரு மலைப்பகுதி. விபத்துக்கான காரணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாலும், ஆரம்ப மதிப்பீடுகள் தொழில்நுட்ப பிழை அல்லது பாதகமான வானிலையைக் காட்டுவதாக அந்த அறிக்கியில் குறிப்பிடப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: admin