உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து வருவதாக உலக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேற்றைய தினத்தின் நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் உலக விலை 1,700 டொலர் என்ற அளவை எட்டியுள்ளது.

இதேவேளை, இன்று காலை கொழும்பு செட்டியார் வீதி தங்கச் சந்தையிலும் உலக சந்தைக்கு ஏற்ப தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, 22 கரட் தங்கத்தின் விலை 163,800 ரூபாயாகவும், 24 கரட் தங்கத்தின் ஒரு பவுன் விலை 177,000 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor