பிக் பாஸ் திருநங்கை அப்சராவின் கண்ணீர் கதை!17வயதில் சர்ஜரி..ஏமாற்றி கழட்டிவிட்ட காதலன்! பிக் பாஸ் வீட்டில் உடைத்து பேசிய அப்சரா!
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 9 தற்போது ரசிகர்களிடையே அதிரடியாக பேசப்படுகிறது. இந்த சீசனில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் — திருநங்கை அப்சரா, தனது வாழ்க்கைப் பயணத்தை பகிர்ந்துகொண்டு, பலரின் இதயத்தையும் தொட்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த அப்சராவிற்கு பெற்றோர் வைத்த பெயர் கிச்சு சிஜே. சிறுவயதிலிருந்தே அவரது நடையும் பாவனையும் வேறுபட்டதாக இருந்தது. இதை கவனித்த பெற்றோர், “பெண்கள் மாதிரி நடக்காதே, பேசாதே” என்று கண்டித்தனர். ஆனால், பள்ளியில் மாணவர்கள் அவரை கேலி செய்து ஒதுக்கினர்.
16 வயதில் தான் அப்சராவிற்கு தனது உடலில் நடக்கும் மாற்றம் குறித்து தெளிவாக புரிந்தது. அதே சமயம் பெற்றோரின் கடுமையான எதிர்ப்பும் இருந்தது. ஆனால், அவரின் அண்ணன் மட்டுமே அப்பொழுது உறுதுணையாக நின்று, “எப்படியிருந்தாலும் அவன் நம் கிச்சுதான், நாமே அவனுக்கு துணையாக இருக்கணும்” என்று குடும்பத்தை மாற்றியமைத்தார். இதனால், அப்சராவின் தாயும் பின்னர் அவருக்கு ஆதரவாக மாறினார்.
அப்சரா பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்ததோடு மட்டுமல்லாமல், எம்.எஸ்.சி பட்டத்தில் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். மேலும், Kerala Natural Training Academyயில் மேக்கப் கலைக்கான பயிற்சியும் பெற்றுள்ளார்.
அதன்பின், தன் உண்மையான அடையாளத்திற்காக 17-வது வயதில் அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினார். அந்த நாளிலிருந்து தான், அவர் தன்னுடைய புதிய பெயராக அப்சரா என்று வைத்துக்கொண்டார். இந்த பெயருக்கு காரணம் — நயன்தாரா நடித்த மாயா படத்தில் வரும் அப்சரா என்ற கதாபாத்திரமாம்.
அப்சரா 11-ம் வகுப்பில் படித்தபோதே தன்னுடைய வகுப்பு தோழன் ஒருவரை காதலித்தார். அந்த தோழனும் அவளை புரிந்துகொண்டு துணையாக இருந்தார். ஆனால் பெண்ணாக மாறியபின், “நீ இவ்வளவு அழகாக இருக்கிறாய், யாரிடமும் பேசக்கூடாது” என்ற பெயரில் அந்த காதலன் மன உளைச்சலை ஏற்படுத்தினார். அதன் காரணமாக, அப்சரா அந்த உறவிலிருந்து விலக வேண்டியதாகி விட்டது.
இந்த உண்மைச் சம்பவத்தை அப்சரா, பிக் பாஸ் வீட்டில் ரம்யா ஜோ மற்றும் வனிதாவிடம் பகிர்ந்துகொண்டார். அவர் கூறிய கதையை கேட்ட மற்ற போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டனர்.
வாழ்க்கையில் பல துன்பங்களையும் அவமானங்களையும் கடந்து இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் தன்னம்பிக்கையுடன் நுழைந்திருக்கிறார் அப்சரா. தற்போது, அவருக்கு வெற்றி காத்திருக்க வேண்டும் என்ற ஆசை ரசிகர்களிடையே பெருமளவில் கிளம்பியுள்ளது.

