உலக சிறுவர் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்க பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

உலக சிறுவர் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்க பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதிநாளன இன்றய தினம் செம்மணியில் புதன்கிழமை நடைபெற்வருகின்ற நிலையில்,

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், போராட்டத்தின் ஆரம்பத்தில் அணையா விளக்கு பகுதியில் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி போராட்டத்தை ஆரம்பமானது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்ககள், சிறிலங்காவில் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இனவழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

மற்றும் இன்றைய தினம் உலக சிறுவர் தினமாக உள்ள போதிலும் இது எமக்கு துர்க்க தினம் எனவும் காணமல் ஆக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு உடனடியாக நீதி வேண்டும் எனவும் செம்மணி மனித புதை குழிக்குள் மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை இவ் தினம் தமக்கு துர்க்க தினம் என கூறி தமது கவணயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்

Recommended For You

About the Author: admin