புதிதாக நியமனம் பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தமது கடமையினை பொறுப்பேற்றார்கள்..!
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நாடாளவிய ரீதியில் புதிதாக நியமிக்கப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களில் மாவட்டச் செயலக நிர்வாக எல்லைக்குள் நியமிக்கப்பட்ட 20 பேர் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (01.10.2025) காலை 09.00 மணிக்கு சந்தித்து தமது கடமையினைப் பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.
இதன்போது அவர்களுக்கான புதிய சேவை நிலையங்கள் தொடர்பாக அரசாங்க அதிபர் கலந்துரையாடினார்.


