போதை மாத்திரையுடன் இளைஞன் கைது..!
யாழ்ப்பாணத்தில் 40 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்தே இளைஞனை கைது செய்துள்ளனர்.


