பாணதுறை பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை

பாணதுறை, வந்துரமுல்ல, அலுபோகிவத்த பகுதியில் வசித்துவந்த 55 வயதுடைய நபர் ஒருவர் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் பேச்சாளர் கருத்துப்படி, இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகளை பாணதுறை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin