கோர விபத்து: பாடசாலை வான் சாரதி உட்பட மூவர் பலி

குளியாப்பிட்டி, தும்மலசூரியவில் இன்று (புதன்கிழமை) ஏற்பட்ட கோர வீதி விபத்தில் பாடசாலை வேன் சாரதி மற்றும் இரண்டு பிள்ளைகள் உட்பட மூவர் உயிரிழந்தனர்.

இவ்விபத்தில் மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு பாடசாலை வேனும் லொறியும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin