பெலியத்தையில் பாடசாலை பஸ் விபத்து: 16 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பெலியத்தை – வீரகெட்டியா வீதியில் உள்ள பெலிகல்ல பிரதேசத்தில் இன்று (ஜூலை 23) காலை 7:30 மணியளவில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தினால் குறைந்தது 16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து பெலிகல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலர் தற்போது வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.
பஸ் வீதியை விட்டு விலகி, வீதியோரக் கரையில் மோதி நின்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது, 13 மாணவர்கள் பெலியத்தை, பெலிகல்ல, தங்கல்ல மற்றும் வீரகெட்டியா ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin