கொஸ்கொட துப்பாக்கிச்சூடு: மேலதிக விவரங்கள் வெளியாகின
நேற்று (ஜூலை 11) மாலை கொஸ்கொட, ஹதரமங்ஹந்தியா பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
வெளியான தகவல்களின்படி, தற்போது வெளிநாட்டில் இருக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘ஷான் மல்லி’ என்பவரே இந்த துப்பாக்கிச்சூட்டை ஏற்பாடு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் கொஸ்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான நிமுத்து அபிஷான் அல்லது ரன் மஹத்தயா என்பவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களின் உண்மையான இலக்கு இவரல்ல என்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
காயமடைந்த நபர் அஹுங்கல்ல பிரதேசத்தில் இருந்து கொஸ்கொட நோக்கி முச்சக்கர வண்டி ஓட்டிச் சென்றுகொண்டிருந்தபோது இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

