கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் வெடிகுண்டு அச்சுறுத்தல்..!

கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் வெடிகுண்டு அச்சுறுத்தல்..!

கனடாவின் ஒட்டாவா, மான்ரியல், எட்மண்டன், வின்னிப்பெக், கல்கரி மற்றும் வான்கூவர் ஆகிய ஆறு முக்கிய விமான நிலையங்களில் குண்டுவெடிப்பு மிரட்டல் காரணமாக விமானச் சேவைகள் தற்காலிகமாகத் தாமதமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

ஏர் கனடா விமான நிலையங்களின் வலைத்தளத்தில், ஏராளமான விமானங்களில் புறப்படும் நேரங்களில் ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேல் தாமதம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கனடாவின் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் கூற்றுப்படி, முக்கிய கனேடிய விமான நிலையங்கள் வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல்களைப் பெற்றதைத் தொடர்ந்து சில விமானங்களை தாமதப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 

அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் மாண்ட்ரீல் மற்றும் ஒட்டாவாவில் உள்ள விமான நிலையங்களுக்கு சுருக்கமான தரை நிறுத்தங்களை வழங்கியது, ஆனால் நியூயோர்க் நேரப்படி காலை 7:40 மணியளவில் அவற்றை நீக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டாவா பொலிஸார், நாட்டின் தலைநகரில் உள்ள விமான நிலையத்தில் நடந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக அறிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin