நீர்கசிவு காரணமாக மூடப்பட்டுள்ள நிலக்கரி மின் உற்பத்தி நிலையம்

நீராவி கசிவு காரணமாக நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் 03 ஆவது அலகு மூடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் செய்தியில் பராமரிப்புப் பணிகள் 03 முதல் 05 நாட்களுக்குள் மேற்கொள்ளப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.

பழுதுபார்க்கும் பணிகள் முடியும் வரை மின் உற்பத்தியை நிர்வகிக்க எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

எச்சரிப்பு
நரோச்சோலை ஆலையின் 3 ஆவது அலகு மூடப்பட்டுள்ளதால் தினசரி மின்வெட்டு நீடிக்கப்பட வேண்டியிருக்கும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று முற்பகல் எச்சரித்துள்ளது.

மின்வெட்டு குறித்த சரியான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று PUCSL தெரிவித்துள்ளது.

தினசரி மின்வெட்டு 01 மணி நேரத்திலிருந்து 02 மணி 20 நிமிடங்களாக சமீபத்தில் நீட்டிக்கப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor