
கண்டி – உடதலவின்ன பகுதியில் மூன்று மாணவர்கள் பயணித்த உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
16 வயதுடைய மாணவர்கள் மூவர் உந்துருளியில் பயணித்தபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்து இடதுபக்கத்தில் உள்ள மதிலொன்றில் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்த மாணவர்கள் மூவரையும் பிரதேசவாசிகள் வைத்தியசாலையில் அனுமதித்த வேளையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த இருவரும் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.