யாழில் மதுபானத்திற்கு பதிலாக ஓடிகலோன் குடித்தவருக்கு நேர்ந்த கதி!

மதுபானம் விலை ஏறியதனால், அதற்கு பதிலாக ஓடிகலோனை குடித்து வந்த 54 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு உள்ளே நேற்று (25) இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகக் கொண்ட, மார்க்கண்டு திருக்குமரன் (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடி
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதுடன் மட்டுமல்லாது, மதுபான போத்தல்களின் விலையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மதுபானம் அடிமையான குறித்த நபர் அதனை வாங்க முடியாத நிலையில், இவர் தொடர்ச்சியாக ஓடிகலோன் குடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய மதியம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: webeditor