இரண்டு சட்டவிரோத மசாஜ் நிலையங்கள் சுற்றிவளைப்பு!

யக்கல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இம்புல்கொட பிரதேசத்தில் இயங்கி வந்ததாக கூறப்படும் இரண்டு சட்டவிரோத மசாஜ் நிலையங்களை சுற்றிவளைத்துள்ளனர்.

அதில் பணி புரிந்த ஆறு பெண்களையும் ஆண் ஒருவரையும் கைது செய்ததாக யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வர்த்தகம் நடத்துவதற்காக பெறப்பட்ட தொழில் உரிமங்கள் ஊடாகவே சட்ட விரோதமாக இந்த இரு மசாஜ் நிலையங்களும் நடத்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர்களை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor