
ஐஸ் போதைப்பொருளுடன் பிரபல பாடசாலைக்கருகில் கைதான 34 வயது சந்தேக நபர் தொடர்பில் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் தொடர்பில் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை (07) இரவு அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல பாடசாலைக்கருகில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு கைதான சந்தேக நபர் சம்மாந்துறைப்பகுதி புளக், ஜே கிழக்கு 03ம் பிரிவைச்சேர்ந்த 34 வயதுடையவர் என்பதுடன், சந்தேக நபர் வசமிருந்து 1 கிராம் 60 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்தது.
சந்தேக நபர் உட்பட சான்றுப்பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இக்கைது நடவடிக்கையானது களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.பி.ஏ.தில்சான் தலைமையிலான விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.