போராட்டகாரர்கள் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி!

போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் போராட்டக்காரர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நாட்டில் அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை.

போராட்டங்களை நடத்த பொலிஸாரின் அனுமதி

எனினும் போராட்டம் நடத்தப்படுவதற்கு ஆறு மணித்தியாலங்களுக்கு முன்னதாக உள்ளூர் பொலிஸாரிடம் போராட்டத்திற்கான அனுமதியை பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

பதில் அமைச்சர்கள் நியமனம்
இந்த நிலையில் அவருக்கு கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor