யாழ் நல்லூரில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகின்றது!

உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல்
யாழ்ப்பாணம் – நல்லூரில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

தியாகதீபம் திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இன்றைய நிவேந்தல் நிகழ்வை மாபெரும் உணர்வெழுச்சியாக கடைப்பிடிக்க வேண்டும் என தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

திரண்டுள்ள பெருமளவு மக்கள்
இந்த நிலையில் பெருமளவு மக்கள் திரண்டு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்படும் அஞ்சலியை குழப்பும் செயற்பாடாக இருதரப்பினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor