கிளிநொச்சி வீடொன்றில் கொள்ளை!

கிளிநொச்சி திருவையாறு இரண்டாம் பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்து பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

17​ பவுண் தங்க நகைகளும் 2லட்சம் ரூபா பணமும்,மோட்டார் சைக்கிள் ஒன்றும்​ கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் வீட்டில் தனிமையில் இருந்த முதியவர்களான கணவன் மனைவி இருவரையும் தாக்கியதுடன் கை, கால் என்பவற்றைக் கட்டி விட்டு பணம் நகை எங்கே உள்ளது என கேட்டுள்ளனர்.

இதன்போது மனைவி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியையும் கையில் இருந்த காப்பையும் கழட்டி கொடுத்தபோது தாலிக்கொடி எங்கே எனக்கேட்டு மீண்டும் இருவரையும் தாக்கியுள்ளனர்.

இவ்வாறு கொள்ளையிட்டவர்கள் தப்பிச் சென்ற போது கைத்தொலைபேசிகளையும் எடுத்துக்கொண்டு வீட்டு உரிமையாளரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவத்தில் வீட்டு உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில்​ கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இச் திருட்டு சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor