இன்று இரவு ஜப்பான் பயணமாகும் ரணில்!

ஜனாதிபதி ரணில் வி்க்ரமசிங்க இரண்டு நாள் விஜயமாக இன்று (25.09.2022) இரவு ஜப்பான் நோக்கி புறப்படவுள்ளார்.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சோ அபேவின் இறுதிச்சடங்கில் பங்கேற்ப்பதற்காக ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

விசேட பாதுகாப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 217 நாடுகளில் இருந்து சுமார் 700 அதிகாரிகள் குறித்த இறுதிச்சடங்கில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக ஜப்பான் டோக்கியோ தலைநகரத்தில் விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கலந்துரையாடல்
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானில் தங்கியிருக்கும் நாட்களில் ஜப்பானின் புதிய பிரதமர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor